Friday, April 16, 2010

தமிழ் அகராதி

மொழிப்பற்று என்பது எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒன்று. இதில் விசேஷம் என்னவென்றால், தாய் மொழியின் அருமையும், பெருமையும், நாம வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ இருக்கும் பொது ரொம்ப அதிகமாகவே தெரியும். ஏன்னு சொன்னா அப்போ நம்ம தாய் மொழி பேச நம்ம கூட யாரும் இருக்க மாட்டாங்க அல்லது ரொம்ப குறைவா இருப்பாங்க. ஆனா நான் மலேசியா வந்ததில் இருந்து, எனக்கு ஒரு வெளிநாட்டில் இருக்கும் எண்ணமே வரல. அடுக்கு காரணம், எங்க பார்த்தாலும் தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் உணவகம் என அடுக்கிட்டே போலாம்.

ஆனா, ஜாப்-ல அப்படி இல்ல. பெரும்பாலானவங்க சீனா காரங்க தான். மேனேஜர், டீம் லீடர் இப்படி எல்லோருமே. எங்க போனாலும் தமிழ் பேசற மக்கள் கொஞ்சமாவது இருக்கறது உண்டு. அப்படி தான் எங்க ஆபீஸ்லும் என்ன மாதிரி இன்னும் இரண்டு சென்னை பசங்க இருக்காங்க. இடைவெளி நேரத்தில் வெளில போறது, லஞ்ச் சாப்ட போறது, போர் அடுச்சா ஒன்னு கூடி கத பேசுறது, இப்படி அடுக்கிட்டே போலாம்.

இதுல என்ன விசேஷம்னா, எங்க பக்கதுலயே மேலதிகாரிகள் (மேனேஜர்) இருப்பாங்கா.. அந்த சமயம் இங்கிலீஷ் ல பேச முடியாது. எப்போ தமிழ் பேசரமோ இல்லையோ, அப்போ தமிழில் தான் பேசி ஆகனும். அப்போது தான் அவங்களுக்கு புரியாது. இதுல முக்கியமான விஷயம் என்னனா, சுத்த தமிழ்ல பேசணும். ஆங்கிலம் கலந்து பேசக் கூடாது.

இதற்காகவே, நாங்கள் ஒவ்வொரு முக்கியமான விஷயத்துக்கும், அதற்கேற்ப தமிழ் வார்த்தை (அகராதி) வைத்துள்ளோம். உதாரணமாக, சில வார்த்தைகள் இங்கே குறிப்பிடுகிறேன்....

பழைய நகரம் வெல்ல காபி - Old Town White Coffee
நேர சதுரம் - Times Square
பக்கத்து ஊட்டு காரி - Next seat girl
சாப்பாடு நீதி மன்றம் - Food Court
பாவப்பட்ட ஊர் - "Sin"gapore
கொட்ட தண்ணி - Coffee
மருத்துவ சான்றிதழ் - MC (Medical Certificate)
முக்கிய சாவி - PrimaryKey
வெளிநாட்டு சாவி - Foreignkey
நாட்டாமை - Project Director
அடியாள் - Developers


இப்படி நெறைய அடிகிட்டே போலாம். எப்படி-லாம் நாங்க தமிழ் வளர்கறோம் பார்தீங்களா... :)

3 Comments:

  1. Aravind Thiagarajan said...
    This comment has been removed by the author.
    Aravind Thiagarajan said...
    நல்ல பதிவு, தாய் மொழியின் அருமையும் பெருமையும், அம்மொழியை பிறமொழி கலக்காமல் வலைபதியும் போது இன்னும் சிறப்பாக இருக்கும். பேச்சு வழக்கில் சிதைந்து கொண்டுஇருக்கும் நம் மொழியை எழுத்து வடிவிலாவது சிதையாமல் சிதைக்காமல் காப்பற்றலாம் :-)
    Anonymous said...
    Yes da its a fact....
    We need to think that.. oru vishyamm niraya irukum pothu athnoda arumai nammaku theriyathuu
    athuvey kidamaa ponallum seri kammiya kidachallum serii appa than athai pathiyee nama yosipom...
    Afterall we all simple Human da

    Cheers for your post
    Regards
    Kevinxalvis

Post a Comment