Tuesday, April 20, 2010

வரி என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு. வரிப்பணத்தை கொண்டே ஒரு நாடு, அதனுடைய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துகின்றது. நாட்டின் சட்ட திட்டத்தின் படி, ஒவ்வொரு தனி நபரும், தான் சம்பாதிக்கும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். இல்லையென்றால் குற்றம் இலைத்ததாகி விடும். அது போலவே வருமான வரிக்கணக்கை தணிக்கை (Tax Filing) செய்ய வேண்டும்.

பெரும் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு, அந்நிறுவனமே சம்பளத்தில் இருந்து வருமான வரியை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்து கொள்ளும். இது யாவும் உள்நாட்டில் நாம் சம்பாதிக்கும் வருமானத்துக்கு உரியவைகள் ஆகும்.

அதுவே நாம் வெளி நாட்டில் வேலை செய்யும் போது, அந்தந்த நாட்டின் வருமான வரி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாட்டிலும் இச்சட்டம் மாறு பட்டதாக இருக்கும்.

ஆனால் வெளி நாட்டில் நாம் வருமான வரி கட்டி சம்பாதித்த பணத்தை நம் நாட்டிற்கு அனுப்பும் பொது, அதற்கென பிரத்யோக சட்டம் இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். இதற்காக இந்திய அரசு, தான் நட்பு பாராட்டும் நாடுகளில், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. அதாவது, எந்த நாட்டில் நமக்கு வருமானம் வருகிறதோ, அந்த நாட்டில் மட்டும் வருமான வரியை செலுத்தினால் போதும். அதே பணத்தை நாம் நமது ஊருக்கு அனுப்பும் போது, அதற்கென தனியாக வருமான வரி கட்ட தேவை இல்லை. இதற்காக, "இரட்டை வரி விடுப்பு சட்டம்" உள்ளது.

இச்சட்டத்தின் படி, குறிப்பிட்ட நாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தொழில் செய்பவர்கள், அங்கு ஈட்டும் வருமானத்துக்கு, உள்நாட்டில் வருமான வரி கட்டினால் போதும். மீண்டும் ஒரு முறை நமது சொந்த நாட்டில் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதை வங்கி மூலமாகவோ, அல்லது அனுமதிக்க பட்ட பிற முறைகளிலோ நாம் சொந்த ஊருக்கு அனுப்பி, எந்த வரியும் கட்டாமலே, வருமானத்தை தணிக்கை செய்து கொள்ளலாம்.

மேலும் விவரமான தகவல்களுக்கு, கீழே குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் காணலாம்.

http://www.incometaxindia.gov.in/publications/9_Income_Tax_For_NRI/Chapter012.asp

1 Comment:

  1. rmdclassic said...
    அம்மா, அம்மா, என் அம்மா.......assalamu alaikum nice kavidhai :)Prophet sal said:
    "Nee un thaayai oru murai kanniyam migundha paarvai paarthaale oru HAJ seidha nanmaiyai ALLAH unakku tharugiraan by rmdclassic

Post a Comment